Pages - Menu

Pages

Friday, January 17, 2014

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..?



நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.???

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்.

வெரி குட்..
மனோஜ் .. நீ சொல்லு.. மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது.. மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து சார்..!!

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்..

"மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

No comments:

Post a Comment