Pages - Menu

Pages

Sunday, December 29, 2013

ஜடமாகவே இருக்கிறேன்...கவிதை!!!




பணம் கிடைத்திருந்தால்
பணக்காரனாக இருந்திருப்பேன்...

நல்ல குரல் வளம் இல்லை
இருந்திருந்தால் பாடகனாக இருந்திருப்பேன்...

நடிக்க தெரியவில்லை
தெரிந்திருந்தால் நடிகனாக இருந்திருப்பேன்...

நல்ல படித்திருந்தால்
சொல்லி இருக்க முடியாது ஆட்சியாளராக இருந்திருப்பேன்...

எனக்கெல்லாம் ஒட்டு கிடைக்காது
கிடைக்குமாயின் மந்திரியாக இருந்திருப்பேன்...

நல்ல நண்பர்கள்
இருந்தால் இன்னும் நல்லவனாக இருந்திருப்பேன்...

விமானம் பார்த்தது கூட இல்லை
பிறகு எதற்கு அந்த வெளிநாட்டு கனவு...

காதலி கிடைக்காததால்
பித்தனாக இருந்திருப்பேன்...

இன்னும் சொல்ல போனால்

மனிதர்களை காணவில்லை
அதனால் மனிதனாக மாறாமல்
ஜடமாகவே இருக்கிறேன்...

No comments:

Post a Comment