Pages - Menu

Pages

Sunday, November 24, 2013

காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!


ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது ,

தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை,

அவளிடம் காரணம் வினாவியது தவளை,
அதற்க்கு அவள் இன வேறுபாடு உள்ளது என்று சொல்லிட்டால்.

இதை கேட்ட தவளை அழுது தவித்தது, கோடை காலம் வந்தது ,
மழையின்றி அனைத்து குளங்களும் வற்றியது, ஆனால் தேவதை நீராடும் குளத்தில் மற்றும் நீர் வற்றவே இல்லை, ஆச்சரியத்தில் இருந்த தேவதை அந்த குளத்தில் உள்ள தாமரையிடம் கேட்டாள்,

அதற்க்கு தாமரை கூறியது, இக்குளத்தில் உள்ளது தண்ணிர் அல்ல
 உன்மேல் காதல் கொண்டதனால் தவளை வடித்த கண்ணீர் என்றது,

தேவதை அப்பொழுதுதான் தவளையின் உண்மை காதலை புரிந்து கொண்டு, காதலுக்கு மன ஒற்றுமை இருந்தால் போதும், இன வேற்றுமை தேவையல்ல என்று உணர்ந்து கொண்டாள்....!

காதலுக்கு மன ஒற்றுமை இருந்தால் போதும், மத வேற்றுமை தேவையல்ல என்பதற்கு இது ஒரு சான்று.

No comments:

Post a Comment