Pages - Menu

Pages

Friday, September 20, 2013

தென்னையும் நாணலும் - நீதிக்கதை!


 
 
ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
 

'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...
 
 
எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.....
 

சில நாட்கள் கழிந்தன....
 

மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
 

புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..
 
 
தென்னையோ புயலை எதிர்த்தது..
 

தென்னை வேரோடு சாய்ந்தது....

நாணல் எந்த சேதமும் அடையவில்லை....
 

நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.
 
 

No comments:

Post a Comment