Pages - Menu

Pages

Sunday, August 31, 2014

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்..!

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள் - இதோ உங்களுக்காக..!

தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால் , அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும் மூன்று நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மாதவிலக்கு சுழற்கி சரியாக இல்லாதவர்களுக்கோ, மாதவிலக்கு சரியாக ஏற்படாதவர்களுக்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது.

உடல் நலக்குறைவால் பாலுறவு நாட்டம் குறைவு : பெண்களுக்கு பொதுவாக 50 வயது எட்டும்போது, மாதவிலக்கு நிற்கத் தொடங்கும் அதுபோன்ற இயற்கையாக மாதவிலக்கு நின்ற பெண்களோ அல்லது கட்டி போன்ற பல காரணங்களால் கர்ப்பப்பையை நீக்கிய பெண்களோ உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், அவர்களின் பாலுறவுப் புணர்ச்சி நாட்டம் குறைவாக அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.


மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு எலும்பு தேய்மான பிரச்சனை, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பின் அவர்களுக்கு பாலுறவில் விருப்பம் இல்லாத நிலை ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்காக 30 வயது முதல் 70 வயதுடைய சுமார் ஆயிரத்து 189 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவர்களில் இயற்கையாக மாதவிலக்கு நின்நவர்களில் 7 விழுக்காட்டினரும், ஆபரேஷன் செய்து கொண்டவர்களில் 12 விழுக்காட்டினரும் செக்ஸ் உறவில் நாட்டமின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.